நம்மாழ்வார் ஐயாவின்
9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப் படுகிறது.
இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்துவருகிறோம்.
அதன்படி வருகிற ஜனவரி 1, 2023ல் ஐயா நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவேந்தல் வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல் :
=>இசை நிகழ்ச்சி.
=>கலை நிகழ்ச்சி.
=>பார்வையாளர்கள் பங்கேற்பு நாடகம்.
=>சிறுதானிய உணவு (மதிய உணவு).
=>விவசாயிகள் அனுபவ பகிர்வு.
=>நண்பர்களுடன் கலந்துரையாடல்.
=> விதை கண்காட்சி.
=>மூலிகை கண்காட்சி.
=> பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி.
=>நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை.
=>இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை
நிகழ்வு நாள் : 1-1-2023
நேரம் : காலை 9மணி முதல் மாலை 5மணி வரை
நிகழ்விடம் :
வானகம் – நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,
சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்-621311.
https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19
தொடர்புக்கு :
+91 8668098492, 8668098495, 9445879292
நன்றி.
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org
https://vanagam.page.link/app